சின்னாளபட்டி:
100 நாள் வேலை திட்டத்தை பேரூராட்சிப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேவுகம்பட்டி பேரூராட்சியில் அகில இந்திய விவசாயத் தொழிலளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் வி.கந்தசாமி, மாவட்டச் செயலாளர் கே.அருள்செல்வன், சக்திவேல்,ராமர், ஜெயக்காளை, பெருமாள்சாமி, முத்துசாமி, செல்லப்பாண்டி உட்பட 800 பேர் கலந்துகொண்டனர்.
வடமதுரை
வடமதுரை பேரூராட்சி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியப் பொருளாளர் சங்கர், மாவட்டப் பொருளாளர் கண்ணன், ஒன்றியத்தலைவர் எம்.கே.சம்சுதீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் மலைச்சாமி, மீனாட்சி சுந்தரம் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.