சென்னை, மே 13- தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடைமுறையில் உள்ள இரு சுழற்சி முறை வகுப்புகளை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரு சுழற்சி முறை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதாவது காலை மற்றும் மதியம் ஆகிய இரண்டு முறை சுழற்சியாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடைமுறை யில் உள்ள இரு சுழற்சி முறை வகுப்புகளை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. காலை நேரக் கல்லூரி காலை 7.30 மணிக்கெல்லாம் தொடங்குவதால் பல கிராமப்புற மாணவர்கள் உணவருந்த முடியவில்லை. இதனால் ரத்த சோகை போன்ற நோயால் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டடு 2006-க்கு முன்பு இருந்த நிலையை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.