கள்ளக்குறிச்சி. ஜூலை 10- திருக்கோவிலூர் நகரில் குறு கிய காலத்தில் அதிகரித்துள்ள கொரோனா தொற்று எண்ணிக் கையை கட்டுப்படுத்த பேரூராட்சி மற்றும் சுகாதாரத் துறையினர் உட னடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கள்ளக்குறிச்சி மாவட்டச் செய லாளர் டி.ஏழுமலை வலியுறுத்தி யுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் அமலில் உள்ள பொதுமுடக்க காலத் தில் மாவட்டத்தில் மிதமாக இருந்த நோய்த்தொற்று தற்போது வேக மாக பரவி வருகிறது. குறிப்பாக திருக் கோவிலூர் நகரில் ஜூன் முதல் வாரத்திலிருந்து கடுமையாக தொற்று பரவி தற்போது 60க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள னர். ஒன்றியம் முழுவதும் 165க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள தாக மாவட்ட நிர்வாகம் தெரி வித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் முதலே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த சாத்தியமான பல்வேறு வழி முறைகளை மாவட்ட நிர்வாகத்திற்கு நேரிலும், மனுக்கள் வாயிலாகவும் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் தெரிவித்துள்ளோம். ஆனால் இவற்றில் பெருவாரியானவற்றை மாவட்ட நிர்வாகம் நடைமுறைப் படுத்தவில்லை. இந்நிலையில் ஜூன் முதல் வாரத்தில் திருக்கோவிலூர் நகரில் ஒற்றை இலக்கத்தில் இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது 60க்கும் மேற்பட்டதாக மாறி நகரத்தில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர். திருக்கோவிலூர் பேரூராட்சியின் மெத்தன நடவடிக்கையே இதற்கு முக்கிய காரணம். தனிமனித இடை வெளி இல்லாமல் வணிக வளாகங்க ளில் மக்களை அதிகளவில் கூட அனுமதித்தது, சுகாதார நட வடிக்கைகளை மேற்கொள்வதில் தொய்வு என பல்வேறு காரணங்க ளால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. பேரூராட்சி செயல் அலுவலருக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டு இருப்பதி லிருந்து அபாயத்தை புரிந்து கொள்ளலாம். எனவே இங்கு பெரிய வணிக வளாகங்கள் மற்றும் ஜவுளி நிறுவனங்களில் பணி புரியக் கூடிய அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும். அங்கு கடந்த ஒரு வார காலத்தில் வந்து சென்றி ருக்கக்கூடிய வாடிக்கையாளர்களை கண்காணிப்பு கேமரா வசதியைப் பயன்படுத்தி கண்டறிந்து பரி சோதனை செய்ய வேண்டும்.
மேலும் ஆண்டுதோறும் பருவ மழைக் காலங்களில் ஏற்படும் மலே ரியா, டெங்கு, ஜூரம் போன்ற வழக்க மான நோய்கள் தற்போது இந்த ஆண்டும் தோன்ற வாய்ப்பு உள்ளது. இப்படி உடல் உஷ்ணம் அதிகரிக்கும்போது இதனை கொரோனா தொற்று என எண்ணி பொதுமக்கள் குழப்பம் அடையும் நிலை உள்ளது. எனவே பருவமழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் பேரூ ராட்சியிலும், ஊராட்சியிலும் சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவது, சுகாதார நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற் கொள்வது என்பது முக்கியமான தாகும். எனவே உடனடியாக திருக் கோவிலூர் நகரில் நோய்த்தொற்றை கட்டுப்பாட்டில் கொண்டுவர பேரூராட்சி, சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.