tamilnadu

img

சட்டமன்ற துளிகள்...

கொரோனா பரிசோதனை

இந்தியாவில் கொரோனா வைரசால் 110 பேர் பாதிக்கப்பட்டுள்ள னர். இவர்களில் 17 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு முன்னெச்ச ரிக்கை மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

தமிழகத்தில் தொடர்ந்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும்  மருத்துவ கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில்  தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக திங்களன்று (மார்ச் 16) வருகை தந்த எம்எல்ஏக்களுக்கு கொரோனா அறிகுறிகள் தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டது. சோதனைக்கு பிறகே எம்எல்எக்கள் சட்டப்பேரவைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.  இதேபோல் சட்டப்பேரவை ஊழியர்கள், தலைமைச் செயலக பணி யாளர்கள், செய்தியாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்க ளின் உதவியாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் சோதனை நடத்தப்பட்டது.  மேலும், மாநகராட்சி சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. சுகாதாரத்துறை ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். 

பார்வையாளர்களுக்கு தடை!

தமிழக சட்டப்பேரவையின் நிகழ்ச்சிகளை பார்வையாளர் மாடத்தி லிருந்து காண்பதற்கு பேரவைக் கூட்டம் நடைபெறும் ஒவ்வொரு நாளும் அனுமதியளிப்பது வழக்கம். கொரோனா வைரஸ் தாக்குதல் எதி ரொலியால் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க திரையரங்குகள், வணிக  நிறுவனங்களையும் மூட அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் வெளியிட்ட அறிவிப்பில், “கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யின் ஒரு பகுதியாக சட்டமன்றத்தில் பார்வையாளர்களின் எண்ணிக் கையை கட்டுப்படுத்த உத்தரவிட்டிருந்தேன். திங்களன்று (மார்ச் 16) பிற்ப கல் முதல் மறு உத்தரவு வரும் வரை பேரவை நிகழ்ச்சிகளை காண தற்காலி கமாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்றார்.