tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 5,880 பேருக்கு கொரோனா பாதிப்பு...  ஒரே நாளில் 119 பேர் பலி... 

சென்னை
தமிழகத்தில் கொரோனா பரவல் கணிக்க முடியாத அளவிற்கு உள்ளது. அதாவது தினசரி பாதிப்பு ஏற்றம், இறக்கமாக உள்ளது. பலி எண்ணிக்கையை பொறுத்தவரை தினசரி 100-யை தாண்டி ஏற்றமாக பயணித்து வருகிறது. 

இந்நிலையில், மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,880 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 2,85,024 ஆக உயர்ந்துள்ளது. இன்று (வெள்ளி) ஒரே நாளில் 119 பேர் பலியாகிய நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,690 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6,488 பேர் குணமடைந்த நிலையில், கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,27,575 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 52,759 சிகிச்சையில் உள்ளனர். இன்றைய கொரோனா பாதிப்பில் 24 பேர் மாநிலத்தின் வெளிப்பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

;