சென்னை, மார்ச் 19- தமிழகத்தில் கொரோனா பரிசோ தனை அனைத்தும் இலவசமாக மேற் கொள்ளப்பட்டு வருகிறது என்றும், மேலும் முதலமைச்சரின் விரிவான காப் பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை மேற்கொள் ளவும் வழிவகை செய்யப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத் தின் போது எதிர்கட்சி துணைத் தலை வர் துரைமுருகன் துணைக் கேள்வி எழுப் புகையில், “ கொரோனா வைரஸ்க்கு தனியார் மருத்துமனையில் 5000 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதா கக் கூறுகிறார்கள். இது அரசுக்கு தெரியுமா? கொரோனா பரிசோத னைக்கு அரசு சார்பில் கட்டணம் வசூ லிக்கப்படுகிறதா? முதலமைச்சர் காப் பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா வைரஸ்க்கும் சிகிச்சை மேற்கொள் ளப்படுமா? என்றார்
இதற்கு பதில் அளித்த அமைச்சர், “கொரோனா சிகிச்சை பெற அரசு சார் பில் எந்தவித கட்டணமும் இல்லை. அனைவருக்கும் இலவச சிகிச்சை தான் வழங்கி வருகிறது. தனியார் மருத்துவ மனையில் ரூ.5 ஆயிரம் கட்டணம் பெற வாய்ப்பில்லை. ஏனென்றால் பரிசோத னைக்கான அனுமதி இதுவரை கொடுக்கவில்லை. கொரோனா பரிசோதனை நிலை யம் அமைக்க இதுவரை தனியார் மருத்துவமனை, ஆய்வகஙகளுக்கு அனுமதி தரப்படவில்லை. தரமான ஆய்வகங்களுடன் தனியார் மருத்துவ மனைகள் முன்வந்தால் அதற்காக மத்திய அரசிடம் அனுமதியை பெற்று தருவதற்கு மாநில அரசு உதவும்.
கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போது. இந்தியாவில் புனேவில் மட்டுமே இந்த வைரஸ் பரிசோதனை செய்யும் வசதி இருந்தது. இரண்டாவது சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் உரு வாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேனி, சென்னை உள்ளிட்ட 6 இடங்க ளில் அந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்தியா முழுவதும் 11 இடங்களில் மட்டும் இந்த பரிசோதனை செய்யும் வசதி உள்ளது. அரசு மருத்துவ மனையில் எந்தவித கட்டணமும் இல்லை. தனியார் மருத்துவ மனையில் படுக்கை வசதிகள் மேற் கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது. முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் மூலம் கொரோனா சிகிச்சை மேற்கொள்ள வழிவகை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.