அவிநாசி அருகே அதிகாலையில் கோர விபத்து
திருப்பூர், பிப்.20- திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வியாழக்கிழமையன்று அதிகாலையில் கேரள அரசுப் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதிய கோர விபத்தில் 19 பேர் பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் நோக்கி கேரள அரசு வால்வோ சொகுசுப் பேருந்து புதன்கிழமை யன்று இரவு புறப்பட்டது. இந்த பேருந்து சேலம் - கோவை நான்கு வழிச் சாலையில் வியாழ க்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் அவி நாசி அருகே திருப்பூர் சாலைப்பிரிவைக் கடந்து வந்து கொண்டிருந்தது. அப்போது கேரளாவில் இருந்து டைல்ஸ் லோடுடன் கண்டெய்னர் லாரி சேலம் நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பை உடைத்துக் கொண்டு எதிர் திசை யில் புகுந்து, கேரள அரசுப் பேருந்தின் மீது நேராக மோதியது. இதில் லாரியின் பின்னி ணைப்பாக இருந்த இரும்பு கண்டெய்னர் சாய்ந்தநிலையில், பேருந்தின் உள்ளே புகுந்து முகப்புப் பகுதி, வலது பக்கவாட்டு இருக்கைகள் மீது மோதியதில் முழுமையாக சிதைந்து சின்னாபின்னமானது.
இதில் பேருந்தின் ஓட்டுநர், ரிசர்வ் ஓட்டுநர் ஆகிய இருவர் உள்பட பயணிகள் சிலர் உடல் சிதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் உள்ளே சிக்கிக்கொண்டு மரண ஓலம் எழுப்பி னர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து அவி நாசி காவல் துறையினர், தீயணைப்பு மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் வாகன பாகங்கள் நொறுங்கிப் பின்னிப் பிணைந்து சிக்கியிருந்த நிலையில் உள்ளே இருந்தவர்களை மீட்பது கடும் சிரமமாக இருந்தது. இந்த கோர விபத்தில் பெண்கள் 5 பேர் உள்பட 19 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்தி கேயன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து மீட்பு பணிகளைப் பார்வையிட்டார். விபத்து குறித்து கேரள அரசுக்கு தகவல் தெரிவித்திருப்பதாக ஆட்சியர் கூறினார். உயிரிழந்தோர் சடலங்கள் அவிநாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
விபத்தில் காயமடைந்தவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கும், சிலர் தனியார் மருத்துவமனைகளுக்கும் கொண்டு செல்லப் பட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தோர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் தவிர மற்றவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
கேரள அமைச்சர்கள்- ஆட்சியர் வருகை
கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.கே.சசீந்தரன், வேளாண்மைத் துறை அமைச்சர் வி.எஸ்.சுனில்குமார், பாலக்காடு மாவட்ட ஆட்சியர் கே.பாலமுரளி, பாலக்காடு எஸ்.பி. ஜி.சிவவிக்ரம், பாலக்காடு எம்.பி., ஸ்ரீகண்டன், ஆலத்தூர் எம்.பி., ரம்யா ஹரிதாஸ் உள்பட பலர் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்தி கேயன், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், கோட்டாட்சியர் கவிதா ஆகியோர் மருத்துவ மனையில் முகாமிட்டு இருந்தனர். மேலும், விபத்து குறித்த தகவல் அறிந்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு வந்து விபத்து பற்றி கேட்டறிந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல், திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் ஆகியோ ரும் வந்திருந்தனர். சடலங்கள் பிரேத பரிசோதனை செய்யப் பட்டு தனித்தனியாக ஆம்புலன்ஸ் வாகனங் களில் கேரளாவில் உள்ள அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
லாரி ஓட்டுநர் கைது
விபத்துக்கு உள்ளான லாரியின் ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்று தலை மறைவானார். ஹேம்ராஜ் என்ற அந்த ஓட்டுநர் ஈரோட்டில் பிடிக்கப்பட்டு காவல் துறையினரால் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. இப்பகுதியில் அண்மை காலத்தில் இல்லாத, கோரமான இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் இறந்தவர்கள்
1.கோபிகா, 2.ஜிஸ்மன் சஜூ, 3.மாஸிகா மணிகண்டன், 4.ஜோபி பால்ஸி, 5.அணு, 6.பைஜூ, 7.ஐஸ்வர்யா, 8.ராகேஷ், 9.எம்.சி.மேத்யூ, 10.சிவக்குமார், 11.கிரீஸ், 12.ஸனூப், 13.இக்னில் ரஃபி, 14.சிவசங்கர், 15.இக்னி ராஜ், 16.விஜயகுமார், 17.நசீர், 18.ஜேசுதாஸ், 19.ரோஸ்லி ஜானி.
விபத்துக்கு காரணம் என்ன?
கேரளாவில் இருந்து வந்த கண்டெய்னர் லாரியின் ஓட்டுநர் தூங்கியிருக்கலாம். அத னால் அந்த லாரி வளைவான அந்த சாலையில் கட்டுப்பாட்டை இழந்து நேராகச் சென்று சாலைத் தடுப்பை உடைத்து எதிரே வந்த பேருந்து மீது மோதி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. விபத்து ஏற்படுத்திய லாரியின் முன்பக்க சக்கரத்தின் டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பைக் கடந்து பேருந்து மீது மோதி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.