tamilnadu

img

முகிலன் வழக்கில் ரகசிய அறிக்கை: சிபிசிஐடி தாக்கல்

சென்னை, ஜூன் 28- சுற்றுச்சூழல் ஆர்வலர் முகி லன் மாயமான வழக்கில் ரகசிய  அறிக்கையை சி.பி.சி.ஐ.டி. போலீ சார், சென்னை உயர்நீதிமன்றத் தில் தாக்கல் செய்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதி ராக கடந்த ஆண்டு மே மாதம் தூத்  துக்குடி மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். அப் போது அவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான ஆவண படத்தை முகிலன் என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் வெளியிட்டார். ஆவணப்படத்தை வெளி யிட்ட பின்னர் சென்னையிலிருந்து  ரயிலில் மதுரைக்கு ச் சென்ற போது அவர் மாயமானார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த  வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி.  போலீசார் விசாரித்து வருகின்ற னர். இதற்கிடையில் முகிலனை  கண்டுபிடித்து ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் ஹென்றி டிபேன் ஆட்  கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசா ரணைக்கு வந்தபோது, மாயமான முகிலன் குறித்து முக்கிய துப்பு கிடைத்துள்ளதாக காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரி விக்கப்பட்டது. அதுதொடர்பான ரகசிய விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு  நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல் குமார் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜ ரான வழக்கறிஞர் சுதா ராம லிங்கம், ‘முகிலன் வட இந்தியா வில் இருப்பதாக பத்திரிகை  ஒன்றில் செய்தி வெளியாகியுள் ளது. முகநூல் பக்கத்தில் முகி லன் எங்கே? என்ற பதிவில், ராஜ பாளையம் காவல்துறை ஆய்வா ளர் முகமது கவுஸ், ‘சமாதி’ என்று  பதில் போட்டுள்ளார். இது எங்க ளுக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது’ என்றார். பின்னர், சி.பி.சி.ஐ.டி., தரப்பில் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் விசாரணை குறித்த புதிய அறிக்கை தாக்கல் செய்  யப்பட்டது. இதை படித்து பார்த்த நீதிபதிகள், “காவல்துறையின ரின் புலன் விசாரணை சரியான  திசையில் செல்கிறது. விசா ரணை புதிய கோணத்தில் நடந்து  வருவதாகவும், ஒவ்வொரு முறை யும் புதுப்புது தகவல்கள் கிடைத்து வருவதாகவும் காவல்  துறை தரப்பில் கூறுகின்றனர்.  எனவே, இந்த சூழ்நிலையில் விசா ரணை விவரங்களை வெளியிட முடியாது. இந்த வழக்கு விசார ணையை 8 வாரத்துக்கு தள்ளி வைக்கிறோம்” என்று உத்தர விட்டனர்.