tamilnadu

img

துயரத்திலிருந்து விடுதலையை செங்கொடி நிழலில் தேடியடைந்த தோழர் - ஜி. ராமகிருஷ்ணன்

களப்பணியில் கம்யூனிஸ்டுகள் 

அன்று ஒரே அமைப்பாக இருந்த இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியில் சேர்ந்து, 1964ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவான போது தானும் இணைந்து பயணிக்கத் தொடங்கி, இன்றும் சில தோழர்கள் துடிப்போடு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அத்த கைய மிக மூத்த தோழர்களில் ஒருவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெருமாள். 1935ம் ஆண்டில் பிறந்த பெருமாள் வத்தலகுண்டு அருகே யுள்ள பழைய வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர். கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்த பெற்றோ ரால் இவரைப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்க இயல வில்லை. கையெழுத்து மட்டும் போடக் கற்றுக் கொண்ட  பெருமாள் தினமும் யாரேனும் ஒரு தோழரிடம் ‘தீக்கதிர்’  நாளேட்டைக் கொடுத்துப் படிக்கச் சொல்லி இயக்கச்  செய்திகளையும் கருத்துகளையும் கேட்டு தெரிந்து கொள்கிறார். எத்தகைய ஈடுபாடு!

ஆரம்பத்தில் பால் கறந்து விற்கும் கூலியாள் வேலை செய்துவந்தார். பின்னர் பலவிதமான கூலி வேலைகளைச் செய்து வாழ்க்கையை மேற்கொண்ட பெருமாள் தன்னுடைய 25வது வய தில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரானார். வத்தல குண்டு நகரில்  நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் தலை வர்களின் உரைகளைக் கேட்டு, குறிப்பாகத் தோழர்  கள் என். சங்கரய்யா, ஜான கியம்மாள் ஆகியோரின் முழக்கங்களால் இயக் கத்தின்பால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைந்ததாகத் தெரிவிக்கிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகள்  சங்கமும் கட்சியும் நடத்திய போராட்டங்களில்  தவறாமல் கலந்து கொண்டார்.

“நீங்கள் கட்சியில் சேர்வதற்கு உங்களுக்கு தூண்டு கோலாக இருந்தது யார்,” என்று கேட்டபோது, “தோழர் முத்து” என்று பதிலளித்தார். அதே கிராமத்தைச் சேர்ந்த வரும், பெருமாளுடைய உறவினருமான தோழர் முத்து 8-ம்  வகுப்பு வரை படித்தவர். அவர் தொடர்ச்சியாக பெருமாளு டன் அரசியல் பற்றியும், கம்யூனிஸ்ட் கட்சி பற்றியும் பேசி வந்திருக்கிறார். “அதுதான் எனக்கு அரசியல் ஆர்வத்தை உரு வாக்கியது. அவர் என்னோடு பேசியதும், எங்கள் பகுதிக்கு வந்த தோழர் கே.பி. ஜானகியம்மாளோடு பேசியதும், அவ ரோடு போராட்டத்தில் கலந்து கொண்டதும் நான் கட்சியில்  சேர்வதற்கு காரணமென,” நெகிழ்வோடு நினைவுகூர்கிறார். பழைய  வத்தலகுண்டில் 1957ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை தொடங்கப்பட்டது. அந்தக் கிளையின்  செய லாளராக முத்து செயல்பட்டார். பிறகு 1960ல் அதே பழைய வத்தலகுண்டு பகுதியில் தோழர் எம்.பி.பாண்டியராஜன், முத்து, சந்தானம், முத்தையா போன்றோருடன் கட்சியின்  புதிய கிளை தொடங்கப்பட்டது. அக்கிளையின் உறுப்பினரான தோழர் பெருமாள் ஆர்வத் தோடு கட்சிப் பணிகளில் ஈடு பட்டார்.   அப்போது கட்சியின் மாவட்டச் செயலாளராக (ஒன்றுபட்ட மதுரை மாவட்டம்) தோழர் ஏ.பி. பழனிச்சாமி செயல்பட்டு வந்தார்.

பழைய வத்தலகுண்டு கிராமத்தில் மக்கள் பிரச்சனை களுக்காக ஏராளமான இயக்கங்களை கட்சி நடத்தியுள்ளது. இத்தகைய இயக்கங்களில் தோழர் பெருமாள் முக்கிய பங்காற்றியிருக்கிறார். குடிநீர் வசதி கோரி பல போராட்டங் கள் இக்கிராமத்தில் நடந்துள்ளன. ஏற்கெனவே ஒரு ரேசன்  கடை வத்தலகுண்டில் மட்டும் இருந்தது. பழைய வத்தல குண்டு கிராம மக்களுக்காக ஒரு தனி ரேசன் கடை அமைக்க  வலியுறுத்திப் போராடியதிலும், இறுதியில் அரசு நிர்வாகம் அங்கே ஒரு ரேசன் கடையை ஏற்படுத்த வைத்ததிலும் பெரு மாளுக்கு முக்கிய பங்குண்டு.  இத்தகைய இயக்கப் பணி களிலும் போராட்டங்களிலும் அயராது பங்கேற்ற தோழர்  பெருமாள் பழைய வத்தலகுண்டு கட்சிக் கிளையின் செய லாளராக 15 ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பணி யாற்றியது குறிப்பிடத்தக்கது. 1964ல் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உதயமானது. அப்போது நடந்த தத்து வப் போராட்டம் பழைய  வத்தலகுண்டு கட்சி கிளை யிலும் எதிரொலித்தது. அத னைத் தொடர்ந்து கிளையில் உள்ள அனைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்ததாகத் தெரிவித்தார் பெருமாள்.

1977ம் ஆண்டு நடைபெற்ற ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் கட்சியின் சார்பில் போட்டியிட்ட தோழர் எம்.பி.பாண்டியராஜன், வெற்றி பெற பெருமாள் தீவிரமாக வேலை  செய்ததை பெருமையோடு கூறினார். 1967ல் வள்ளி யம்மாளை திருமணம் செய்தார். 1973ல் திமுக ஆட்சியின்போது, கடுமையான அத்தியா வசிய பொருட்களின் விலை உயர்வை எதிர்த்து மாநிலந்தழு விய மறியல் போராட்டத்திற்கு மாநிலக்குழு அறைகூவல் விடுத்தது. இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக  நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர் பெருமாள் உள்ளிட்டு  பங்கேற்ற தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட னர். மதுரை, முகவை மாவட்டத்தைச் சார்ந்த 1649 பேர் 33  நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் தோழர்கள்  ஏ.பி.பழனிச்சாமி, என்.வரதராஜன், எஸ்.ஏ.தங்கராஜன், கார்மேகம், எஸ்.ஏ.பெருமாள், முன்னாள் எம்எல்ஏ பழனிவேலு உள்ளிட்ட தோழர்களோடு தானும் சிறையில் இருந்ததை பெருமாள் நெகிழ்வோடு குறிப்பிட்டார்.

தோழர் பெருமாள் சிறையிலிருந்த போது அவரது தந்தை சித்தர நாயக்கர் இறந்து விட்டார். அந்த இறப்பையொட்டி எப்படியாவது பெரு மாளை சிறையிலிருந்து அழைத்து வர அவரது உறவினர்களும், கட்சியின ரும் பெரு முயற்சி மேற்கொண்டனர்.  ஆனால் முடியவில்லை. தனது தந்தை யின் இறுதி நிகழ்ச்சியில் கூட பெருமாளால் கலந்து கொள்ள இயல வில்லை.   அவரது மனைவி வள்ளியம்மாள்  மற்றும் குடும்பத்தினரால் குத்த கைக்கு எடுத்த வாழைத்தோட்டத்தை பராமரிக்க முடியாததால் அழிந்து  போனது. 33 நாட்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்ட பெருமாள் நேராக வீட்டுக்கு வந்தார். தந்தை இறந்தது உள்பட, சந்திக்க நேர்ந்த பல்வேறு  துயரங்களிலும் மனஉறுதியோடு இருந்தவர் பெருமாள். சிறையி லிருந்ததால் குடும்பத்தில் நெருக்கடி ஏற்பட்டாலும், தனது ஆயுள் வரை  செங்கொடிதான் தனது வாழ்க்கை என்று குடும்பத்தினருக்குக் கூறிய தாக பெருமாள் நெகிழ்வோடு கூறினார்.  

கட்சி ஒரு போராட்டம் அறிவித்தால். அதை கட்சியின் கட்டளையாக  ஏற்றுச் சிறை செல்ல இன்றும் தயாராக இருப்பவர்தான் தோழர் பெருமாள். 2003ம் ஆண்டு தோழர் பாண்டியராஜன் படுகொலை செய்யப்பட்டார். அதை விபத்து என்று கூறி வழக்கைத் திசைதிருப்பவும், கொலையாளி களைத் தப்பிக்கச் செய்யவும் காவல்துறையினர் உடந்தையாக இருந்த னர். அப்போது, மக்களைத் திரட்டி வலுவான இயக்கத்தை நடத்தி கொலை யாளிகளுக்கு தண்டனையை உறுதிப்படுத்தக் கட்சி மேற்கொண்ட நடவடிக்கைகளில் தோழர் பெருமாள் முக்கிய பங்காற்றியிருக்கிறார். பழைய வத்தலகுண்டு கிராமத்தில் கட்சிக்காக ஒரு அலுவலகம் கட்டி  எழுப்புவதில் தோழர் பெருமாள் பிரதானமான பங்காற்றினார். சொந்த வீடு  கட்டுவதற்காக வைத்திருந்த செங்கல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட் களை கட்சி அலுவலகம் கட்டுவதற்காக வழங்கினார். குடும்ப நலனை விட  கட்சி நலனே பிரதானமானது என கருதியவர், கருதுகிறவர் தோழர் பெருமாள்.

தான் படிக்கவில்லையென்றாலும், தனது பிள்ளைகளைப் படிக்க வைத்தார். இவருக்கு 2 மகள்கள். 2 மகன்கள். அனைவருக்கும் திருமண மாகி விட்டது. மகன் ராமமூர்த்தி நூலக அறிவியலில் முனைவர் பட்டம்  பெற்று, மத்திய அரசுத் துறையில் பணியாற்றி வருகிறார். தோழர் பெரு மாளின் துணைவியாருக்கு 72 வயதாகிறது. அவரது உறுதியான பின்புலத்  தில்தான் தன்னால் அர்ப்பணிப்போடு கட்சிப் பணியாற்ற முடிந்தது என்று குறிப்பிடுகிறார்.

பழைய வத்தலக்குண்டு கிராமத்தில் தற்போது ஒரு கட்சிக்கிளையும், விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், வாலிபர் சங்கம்,  மாதர் சங்கம் ஆகிய அமைப்புகளின் கிளைகள் இயங்கி வருகின்றன. இந்த கிராமத்தில் மட்டும் 15 தோழர்கள் தீக்கதிர் வாங்குகிறார்கள். தோழர் பெருமாள் மலைவேடன் என்ற பழங்குடியினத்தைச் சார்ந்தவர்.  இந்த சமூகத்தைச் சார்ந்த மக்களுக்கு பழங்குடியின சாதி சான்றிதழ் கிடைக்காமல் இருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்க ளில் ஒருவரான பி. ராமமூர்த்தி உள்ளிட்டு பல தோழர்கள் எடுத்த முயற்சியி னால் நாடாளுமன்றத்தில் மலைவேடன் சமூகத்தைச் சார்ந்தவர்களை  பழங்குடியின பட்டியலில் சேர்த்திட சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த மகத்தான பணி பற்றி தனியாக கட்டுரை எழுத வேண்டும். தோழர் பெருமாள் கட்சியின் உயர் பொறுப்புக்கு வரவில்லை. ஆனால்  அர்ப்பணிப்போடு கட்சிப்பணியாற்றியவர். அவரைப் போன்ற தோழர்க ளுடைய போர்க்குணமிக்க கட்சி பணியினால்தான் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துடிப்போடு செயல்படக்கூடிய கட்சியாகத் திகழ்கி றது. இப்போதும் தோழர் பெருமாளின் தன்னலமற்ற ஈடுபாடு இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. தற்போது 84  வயதாகும் நிலையில் கட்சி உறுப்பினராக இருந்து கொண்டு தனது உடல் நிலை அனுமதிக்கிற அளவுக்கு இயக்கப் பணியைச் செய்து  வருகிற தோழர் பெருமாளின் முன்னுதாரணமான களப்பணி பாராட்டக்கூடி யது, பின்பற்றத்தக்கது.