tamilnadu

img

ஆக.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை,ஜூலை 30-  கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு சில தளர்வுகளுடன் அம லில் உள்ளது. இதில் தமிழ்நாட்டில் ஆகஸ்ட்  31 ஆம் தேதிவரை கூடுதல் தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக தமிழக முத லமைச்சர் எடப்பாடி  பழனிசாமி அறிவித்து ள்ளார்.  அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப் படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் பல்வேறு தளர்வுகளுடன் இதுவரை 5 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. தற்போது பிற மாவட்டங்களிலும்  கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் தமிழகத்தில் ஜூலை 31 ஆம் தேதியுடன்  ஊரடங்கு நிறைவடையும் நிலையில் கொரோனா நிலவரம் குறித்து 29 ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனும்  30 ஆம் தேதி  மருத்துவ நிபுணர் குழுவுடனும் முதலமைச்சர்  ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில்  முதலமைச்சர் பேசுகையில், அரசின் விரைவான நடவடிக்கை களால் சென்னையில் பாதிப்பு குறைந்துள்ளது. இதுவரை 14 லட்சம் பேர் காய்ச்சல் முகாம் களால் பயன் அடைந்துள்ளனர். இந்தியா விலேயே தமிழகத்தில்தான் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. அனைவருக்கும் தமிழக அரசின் மூலம் இலவச முகக் கவசம் வழங்கப்படுகிறது. அதிக பரிசோதனை கூடங் கள் உள்ள மாநிலம் தமிழகம் தான்.இந்தியா விலேயே 25 லட்சத்து 36 ஆயிரத்து 660 பரிசோதனைகள் தமிழகத்தில் செய்யப்பட்டுள் ளன என்றார்.

மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்திய பின் முதல்வர் கூறுகையில்,  சென்னை பெருநகரக் காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தற்போது 50  சதவீதப் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டிருக்கும் நிறு வனங்கள் அனைத்தும் 75 சதவீத பணி யாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப் படுகிறது. உணவகங்களிலும் தேநீர்க் கடைகளிலும் மொத்த இருக்கைகளில் 50 சதவீதம் அளவுக்கு காலை ஆறு மணி முதல் மாலை 7 மணி வரை உள்ளே அமர்ந்து உணவு அருந்த அனு மதி அளிக்கப்படுகிறது. ஏ.சி.யை இயக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. பார்சல் உணவு களைப் பொறுத்தவரை இரவு 9 மணிவரை வழங்கலாம்.

ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிப் பகுதி களில் உள்ள சிறிய வழிபாட்டுத் தலங்களில் மாவட்ட ஆட்சித் தலைவரின் அனுமதியுடன் தரிசனங்கள் அனுமதிக்கப்படும். ஆனால், மாந கராட்சிப் பகுதிகளிலும் பெரிய வழிபாட்டுத் தலங் களிலும் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. காய்கறிக் கடைகள், மளிகைக்கடைகள் ஆகியவை இரவு 7 மணி வரை இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகளும் இரவு 7  மணிவரை இயங்க அனுமதிக்கப்படும். அத்தியாவசியமற்ற பொருட்களையும் இ - காமர்ஸ் நிறுவனங்கள் விநியோகம் செய்யலாம்.

ரயில், விமானப் போக்குவரத்தைப் பொறுத்த வரை ஏற்கனவே உள்ள நிலை தொடரும். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும்போது, பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும்போது அந்தந்த மாவட்டத் தலைவரிடம் இ - பாஸ் பெற வேண்டும். சுதந்திர தினத்தைப் பொறுத்தவரை முகக் கவசம் அணிந்து, சமூக விலகலுடன் கொண்டாடப்படும். மதம் சார்ந்த கூட்டங்களுக்கு, சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. வணிக வளாகங்களைத் திறக்கவும் கல்வி நிலையங்களைத் திறக்கவும் தடை நீடிக்கிறது. மெட்ரோ ரயில், மின்சார ரயில், பேருந்துப் போக்குவரத்து, திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும். நோய்த் தொற்றின் நிலையை மனதில் கொண்டு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

 

;