tamilnadu

img

ரத்தத்தை உறிஞ்சுபவர்களிடையே ரத்தம் கொடுக்கும் வாலிபர் சங்கம்

மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் பெருமிதம்

சென்னை, நவ. 3 - ரத்தத்தை உறிஞ்சுபவர்களுக்கு மத்தியில் ரத்தம் கொடுத்து போராடும் வாலிபர் சங்கத்தை பாராட்டுவதாக சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறி ஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் கூறினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 40ஆம் ஆண்டு அமைப்பு தின தொடக்க விழா ஞாயிறன்று (நவ.3) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தென்சென்னை மாவட்டம் சார்பில் அண்ணாநகர் பகுதியில் ரத்த தான முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தொடங்கி வைத்து மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் பேசுகையில், “மக்கள் பிரச்சனை களுக்காக களத்தில் ரத்தத்தை சிந்தி வாலிபர் சங்கத்தினர் போராடு கின்றனர். அதேநேரத்தில் மக்களின் உயிர் காக்க ரத்ததானமும் செய்கின்ற னர். அரசியலில் இருப்பவர்கள் மக்களின் ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கையில், பாதிக்கப் பட்டுள்ள மக்களை காக்க  ரத்தம் கொடுக்கும்  வாலிபர்களை பாராட்டுகி றேன்” என்றார்.

“நாட்டிற்கு விடுதலை கிடைத்தா லும் இன்னும் மக்களுக்கு முழுமை யான விடுதலை கிடைக்கவில்லை. மக்க ளுக்கு முழுமையான விடுதலை கிடைக்க வாலிபர் சங்கம் தொடர்ந்து போராடும் என்று நம்பிக்கையை வாலிபர் சங்க செயல்பாடுகள் உணர்த்து கின்றன” என்றும் கூறினார்.

சமூக மாற்றத்திற்கான அமைப்பு 

முன்னதாக வாலிபர் சங்கக் கொடியை ஏற்றி வைத்துப் பேசிய சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் சி.பாலசந்திரபோஸ், “அண்மையில், மதுரையில் நடைபெற்ற வாலிபர் சங்க விழாவில் அன்றைய காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ராமசுப்பிரமணி யமும் கலந்து கொண்டனர். அந்நிகழ் வில் பேசிய நீதிபதி ராமசுப்பிரமணியம், பொதுவாக வாலிபர் சங்கத்தினர் எங்காவது மக்கள் பிரச்சனைக்காக போராடுவார்கள். அவர்களை போலீசார் பிடித்துக் கொண்டு வந்து எங்கள் முன் நிறுத்துவார்கள். தர்மசங்கடமான, முரண்படான சூழலில் அவர்களை சிறைக்கு அனுப்புவோம். ஆனால், வாலிபர் சங்கம் நடத்திய ரத்ததான முகாமில் நீதித்துறையும், காவல்துறை யும் உங்களை நாடி வந்துள்ளது. வாழ்த்துகிறேன் என்று பெருமிதத்துடன் கூறினார். அப்படிப்பட்ட அமைப்பு வாலிபர் சங்கம்” என்று பெருமைப்பட கூறினார். “வாலிபர் சங்கம் சமூக சேவை செய்யும் இயக்கம் மட்டும் அல்ல; சமூக மாற்றத்திற்கான அமைப்பு. மக்களுக்காக களத்திலும் நிற்கும், தேவையேற்படும் போது ரத்தத்தை கொடுத்தும் உதவும். சுமார் 15 லட்சம் யூனிட் ரத்தம் கொடுத்த மிகப்பெரிய குருதிக் கொடையமைப்பாக வாலிபர் சங்கம் விளங்குகிறது” என்றும் அவர் கூறினார். தென்சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ் தலைமை யில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாற்றுத்திறனாளிகள் துறை சட்ட அலுவலர் எல்.ரஜினிகாந்த், வழக்கறி ஞர் ஆர்.திருமூர்த்தி, குடிநீர் வாரிய உதவி பொறியாளர் ஜி.வி.மதுசூதனன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ப.ஆறுமுகம், அண்ணாநகர் பகுதி நிர்வாகிகள் தீபக், செயலாளர் கே.மணிகண்டன், பொருளாளர் பிரியதர்ஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 


மதுரை புறநகர் மாவட்டம் பொதும்பு கிராமத்தில் வாலிபர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமை மாநிலச் செயலாளர் எஸ்.பாலா துவக்கி வைத்தார். மாவட்ட தலைவர் தமிழரசன், செயலாளர் கார்த்திக், நிர்வாகி மாதவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.