ரூ.15 கோடியில் ‘ஹஜ் இல்லம்’
சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் புதனன்று(பிப்.19) வெளி யிட்ட அறிவிப்புகள்: தமிழ்நாட்டில் உள்ள வக்பு நிறுவனங்க ளில் பணியாற்றி ஓய்வுபெற்று வறிய நிலை யில் உள்ள உலமாக்களுக்கு தற்போது வழங்கப்படும் மாதந்திர ஓய்வூதியம் 1,500 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
ஹஜ் பயணிகள் தங்களுடைய பய ணத்திற்கு முன்பு தங்கி கடவுச் சீட்டு, பயண உடமைகள் சமர்ப்பித்தல் உள்ளிட்ட பல் வேறு பணிகளை சிரமமின்றி மேற்கொள்ள தமிழ்நாடு வக்பு வாரியம் சென்னையில் ஒதுக்கீடு செய்யும் நிலத்தில் ஒரு ‘ஹஜ் இல்லம்’ கட்ட ரூ. 15 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும். தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட 2,814 வக்பு நிறுவனங்கள் தற்போது தமிழ்நாட்டில் உள்ளன. இந்த பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இரு சக்கர வாகனங்கள் வாங்க 25,000 ரூபாய் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ, அத்தொகை மானியமாக வழங்கப்படும்.
புதிய தலைமுறை-நியூஸ் 18 டிவிக்கள் மீது உரிமை மீறல்
புதிய தலைமுறை மற்றும் நியூஸ்-18 ஆகிய தொலைக்காட்சிகள் உண்மைக்கு மாறன செய்தியை வெளியிட்டது குறித்து சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்த தும், மின் துறை அமைச்சர் தங்கமணி கொண்டு வந்த உரிமை மீறல் பிரச்ச னைக்கு பேரவைத் தலைவர் ப. தனபால் அனுமதியளித்தார். அப்போது பேசிய அமைச்சர், “திமுக உறுப்பினர் மனோ தங்கராஜ் பேசும் போது டாஸ்மாக் வருமானம் அதிகரித்திருக்கிறது என்று சொன்னார். அதற்கு பதில் அளித்த நான், விலைவாசி உயரும்போது டாஸ்மாக் வருவாய் அதிகரித்து வருகிறது. அது உங்கள் ஆட்சியிலும் அதிகரித்திருக்கிறது. எங்கள் ஆட்சியிலும் உயர்ந்திருக்கிறது என்று சொன்னேன்.
அப்போது இங்கு பேசியவர்கள் குறுக்கீ டாக, அதிகமாக குடிப்பதால் வருமானம் அதிகமாகிவிட்டது என்றனர். நாங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அதற்காக 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி யிருக்கிறோம். அதையும் மீறி குடிப்ப வர்களை நாங்கள் என்ன செய்யமுடியும் என்று சொன்னதை மாற்றி, மக்கள் அதிகமாக குடிக்கின்றனர். அதனால் வருமானம் அதிகமாக வருகிறது என்று புதிய தலைமுறை மற்றும் நியூஸ் 18 ஆகிய இரண்டு தொலைக்காட்சிகளும் செய்தியை ஒளிபரப்பினர். இதுகுறித்து நான் உரிமை பிரச்சனையை கொடுத்திருக்கிறேன். நான் அவையில் பேசியதையும் தங்களிடம் கொடுத்திருக்கிறேன். ஆகவே, தகுந்த நீதி வழங்க வேண்டும்” என்றார். இதற்கு விளக்கம் அளித்த பேரவைத் தலைவர் ப.தனபால், இந்த பிரச்சனையை மேலேழுந்தவாரியக பார்க்கிறபோது அவை உரிமை மீறல் இருப்பதாக தெரிவ தால் பேரவை விதி 226-ன் கீழ் அதுகுறித்து ஆய்ந்து அறிக்கை அளிப்பதற்காக அவை உரிமைக்குழுவுக்கு அனுப்பி வைக்கி றேன்” என்றார்.