குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் கைது செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும், போதையில் வாகனம் ஓட்டுவோரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர் கூடுதலாக இழப்பீடு கோரி தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.