tamilnadu

img

மேலவளவு கொலை வழக்கு விடுதலையான 13 பேரும் எதிர்மனுதாரர்களாக சேர்ப்பு

தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை,நவ.20- மதுரை மேலவளவு 7 பேர் கொலை யான வழக்கில் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட  13 பேரை எதிர்மனு தாரர்களாக சேர்த்தும் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உயர்நீதி மன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 1997 ஆம் ஆண்டு, மதுரை மாவட்டம் மேலூர் அருகே பட்டியலினத்தைச் சேர்ந்த  மேலவளவு ஊராட்சி தலைவர் முருகேசன் உள்பட 7 பேர்  படுகொலை செய்யப் பட்டனர். இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள்  தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்  அவர்கள் மீதான தண்ட னையை உறுதி செய்தது. இந்த வழக்கில் தொடர்புடைய சிலர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் நவம்பர் 8 அன்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மேலவளவு கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த 13 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

இதுதொடர்பான அரசாணை நகலை வழங்கக்கோரி மூத்த வழக்கறிஞர் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்  மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் 13 பேர் விடுதலை தொடர்பான அரசாணையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கு தொடர்பான அதிகாரிகளை நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டனர். இந்நிலையில்  இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த வெங்கடேஷ் அமர்வு முன்பு புதனன்று விசாரணைக்கு வந்தது. சிறைத்துறை டி.ஐ.ஜி,  எஸ்.பி.மற்றும் அதிகாரிகள் ஆஜராகி னர்.  சிறைத்துறை அதிகாரிகள்,  13 பேர் விடு விக்கப்பட்ட அரசாணையை தாக்கல் செய்தனர்.  அப்போது நீதிபதிகள் கூறுகையில், கொலை வழக்கில் கைதானவர்களின்  தண்ட னையை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தி யுள்ள நிலையில் தமிழக அரசு ஒரு அர சாணை மூலம் விடுவித்துள்ளது அதிர்ச்சி யளிக்கிறது. கொலை வழக்கில் தண்டிக்கப் பட்டுள்ள நிலையிலும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இருந்து விடுவிக்கப் பட்டுள்ளனர். இதனை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்யாதது ஏன் என்று  கேள்வி எழுப்பினர். 13 பேர் விடுதலை செய்யப் பட்ட அரசாணை எதன் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டது என தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.   மேலும் விடுதலை செய்யப்பட்ட 13 பேரையும் எதிர் மனுதாரர்களாக சேர்த்தும் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 25-க்கு ஒத்திவைக்கப்பட்டது.