ஒரே நாளில் 5 பேர் பலி
சென்னை,மே 23- தமிழகத்தில் சனிக்கிழமையன்று மேலும் 759 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 753 பேராக இருந்தது.மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து 7 ஆயிரத்து 128 பேர் குணமடைந்திருந்தனர். ஆனாலும், மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 98 பேராக இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் வெளி யிட்டுள்ளது.
அந்த தகவலின்படி, மாநிலத்தில் சனிக்கிழமையன்று புதிதாக 759 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 512 பேராக அதிகரித்துள்ளது. மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 491 பேராக உயர்ந்துள்ளது. ஆனாலும், கொரோ னாவுக்கு சனிக்கிழமையன்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 103 பேராக அதிகரித்துள்ளது.