tamilnadu

img

காலநிலை மாற்றம் பேரழிவுகளை இரட்டிப்பாக்குகிறது - ஐ.நா

காலநிலை மாற்றம் காரணமாக 2000 ஆண்டு முதல் 2019 ஆண்டுவரை 4.2 பில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக பொருளாதாரத்திற்கு 2.97 டிரில்லியன் டாலர் செலவாகும்.

கடந்த 20 ஆண்டுகளில் இயற்கை பேரழிவுகள் இரட்டிப்பாக இருப்பதற்கு காலநிலை மாற்றம் பெரும்பாலும் காரணம் என ஐக்கிய நாடுகள் சபை திங்களன்று தெரிவித்துள்ளது. 2000 முதல் 2019 வரை 7 ஆயிரத்து 348 பெரிய பேரழிவு நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளது. இதனால், 1.23 பில்லியன் பேர் பலியாகியுள்ளனர். 4.2 பில்லியன் மக்களை பாதித்துள்ளது. உலகப் பொருளாதாரத்திற்கு 2.97 டிரில்லியன் டாலர் வரை செலவாகும் என தெரிவித்துள்ளது. 
1980 முதல் 1999 வரை 4 ஆயிரத்து 212 பெரிய அளவிலான இயற்கை பேரழிவுகளைவிட இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வெள்ளம், வறட்சி, புயல்கள் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் உள்ளிட்ட காலநிலை தொடர்பான பேரழிவுகள் அதிகரிப்பதே இந்த அதிகரிப்புக்கு காரணமாகும். அதிக வெப்பமும் ஆபத்தானது என்பதை நிரூபிக்கிறது. காலை நிலை இடையூறுகளைத் தடுக்க அரசாங்கம் போதுமானதாக இல்லை என யுஎன்டிஆர்ஆர் தலைவர் மாமி மிசுடோரி கூறியுள்ளார். 

நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து 6 ஆயிரத்து 681 காலநிலை-தொடர்புடைய நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய 20 ஆண்டு காலத்தில் 3 ஆயிரத்து 656 ஆக இருந்தது. பெரிய வெள்ளமாக 3 ஆயிரத்து 254 ஆக இரு மடங்காக அதிகரித்துள்ள நிலையில், முந்தைய காலகட்டத்தில் ஆயிரத்து 457 ஆக இருந்த 2 ஆயிரத்து 34 பெரிய புயல்கள் ஏற்பட்டது. பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் தீவிர வானிலை நிகழ்வுகளின் தொடர்ச்சியாக எதிராக போராடியுள்ளனர். பல இயற்கை பேரழிவு அமைப்புகளில் இறப்புகளின் எண்ணிக்கையை குறைக்க சிறந்த ஆயுத்தமும் ஆரம்ப எச்சரிக்கை முறைகள் உதவியிருந்தாலும், விரிவடைந்து வரும் காலநிலை அவசரநிலையால் அதிகமான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

கடந்த 20 ஆண்டுகளில் இதுபோன்ற 3,068 சம்பவங்களுடன் ஆசியா மிக அதிக பேரழிவுகளை சந்தித்துள்ளது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா 1,756 ஆகவும், ஆப்பிரிக்கா 1,192 ஆகவும் இருப்பதாக அறிக்கை காட்டுகிறது. பாதிக்கப்பட்ட நாடுகளைப் பொறுத்தவரையில், 577 நிகழ்வுகளுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. வெப்பமயமாதல் காலநிலை இத்தகைய பேரழிவுகளின் எண்ணிக்கையையும் தீவிரத்தையும் உண்டாக்குவதாகத் தோன்றினாலும், பூகம்பங்கள் மற்றும் சுனாமிகள் போன்ற புவி இயற்பியல் நிகழ்வுகளிலும் காலநிலை சம்பந்தமில்லாதவை, ஆனால் குறிப்பாக ஆபத்தானவை. கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான ஒற்றை பேரழிவு 2004 இந்தியப் பெருங்கடல் சுனாமியால் 226,400 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து 2010 இல் ஹைட்டி பூகம்பம் ஏற்பட்டது, இது 222,000 உயிர்களைக் பலிகொண்டது.