tamilnadu

img

யாருக்கு நல்ல நாள்; உங்களுக்கா - மக்களுக்கா? அஜீத் சிங் கிண்டல்

லக்னோ, ஏப். 8 -

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரிய லோக் தளம் ஆகிய கட்சிகளின் முதல் கூட்டுப் பிரச்சாரக் கூட்டம் தியோபந்த்தில் நடைபெற்றது. இதில் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சித் தலைவர் அஜீத் சிங் பேசியிருப்பதாவது:“மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, உத்தரப் பிரதேச மேற்குப் பகுதிகளில் கலவரங்கள் நடந்தன. இந்த கலவரங்களுக்கு பாஜக-தான் காரணம் என்றாலும், பகிரங்கமாக அவர்கள் முன்னிற்கவில்லை. இதனால்தான் 2014-இல் பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது. இப்போது அப்படியில்லை; கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த கலவரங்கள் எல்லாம் பாஜக முன்னிலையில்தான் நடந்திருக்கின்றன. எல்லாவற்றிலும் அவர்கள் இருந்தார்கள். எனவே அவர்கள் இந்தமுறை ஆட்சிக்கு வருவது மிகவும் சிரமம்.நல்ல நாள் வரும் என்று மோடி கூறிக்கொண்டிருக்கிறார். அப்படியானால், கடந்த ஐந்து ஆண்டுகளில் பதவியில் இருக்கும்போது மோடி என்ன செய்து கொண்டிருந்தார்? நல்ல நாள் வரும் என்று மோடி கூறுவது, அவருக்கா, அல்லது மக்களுக்கா? இவ்வாறு அஜீத் சிங் கேட்டுள்ளார்.

;