tamilnadu

img

டிவியை நிறுத்த மறுத்த தந்தையை சுட்டுக் கொன்ற மகன்

உத்திரபிரதேசத்தில் டிவியை நிறுத்த மறுத்த தந்தையை ஆத்திரத்தில் மகன் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் நசீர் பூர் கிராமத்தை சேர்ந்தவர் லாலாராம். இவர் நீண்ட நேரம் டிவி பார்த்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது மகனும், ஓய்வுபெற்ற ராணுவ வீரருமான  அசோக் கதிஹார், டிவியை நிறுத்துமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து தந்தைக்கும் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மகன் தந்தையை கீழே தள்ளி,  தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அவரை சுட்டார். அசோக் கதிஹார் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த லாலாராம் உயிரிழந்தார்.  இதனால் அதிர்ச்சியடைந்த அசோத் அங்கிருந்தது தப்பி ஓடி விட்டார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு  செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.