tamilnadu

img

ஹத்ராஸ் சம்பவம்: பத்திரிகையாளர் உள்ளிட்ட 4 பேர் கைது

ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக பத்திரிகையாளர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கில் உத்திரபிரதேச அரசின் நடவடிக்கை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. இந்நிலையில் பத்திரிகையாளர் உள்ளிட்ட 4 பேரை மதுரா அருகில் உள்ள சுங்க சாவடியில் வைத்து உத்திரபிரதேச காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அடீக் உர் ரஹ்மான், சித்திகி கப்பான், மசூத் அகமது, ஆலம் ஆகிய 4 பேரை போலீஸார் சந்தேக அடிப்படையில் கைது செய்துள்ளனர். இதில் சித்திகி கப்பான் பல மலையாள ஊடகங்களுக்காகப் பணியாற்றி வருபவர். இவர் திங்களன்று ஹத்ராஸ் சென்று செய்தி சேகரிக்க வேண்டும். ஒரு தன் கடமையைச் செய்த செய்தியாளரை கைது செய்திருக்கிறீர்கள். அவரை உடனடியாக  விடுவிக்க வேண்டும் என்று கேரள பத்திரிகையாளர் சங்கம் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இவர்களிடம் சந்தேகத்துக்கு இடமான எழுத்துகள் இருந்ததாகவும் அது பொது  அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் என மதுரா போலீசார் தெரிவித்தனர். இதில் சித்திகி கப்பான் ஒரு பத்திரிகையாளர் என்றே கருதாமல் காவல்துறையினர் இவர்கள் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாப்புலம் பிரண்ட் ஆப் இந்தியா இந்தக் கைதுகளை கடுமையாகக் கண்டித்துள்ளது. இது இழிவானது, சட்ட விரோதமானது என்று தாக்கியுள்ளது. ஹத்ராஸ் பெண்ணுக்கு நீதி கிடைக்கச் செய்யாமல் ‘சதிக்கோட்பாடு’ பேசி திசைத்திருப்புகின்றனர் என்று கடுமையாகச் சாடியுள்ளது.