tamilnadu

img

உ.பி-யில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் 8 வயது சிறுவன் உட்பட 12 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் குடிமக்களின் தேசிய பதிவேட்டிற்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய தடியடியில் 8 வயது சிறுவன் உட்பட 12 பேர் பலியாகி உள்ளனர்.

மத்திய பாஜக அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இன்று மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம்  முழுவதும் போராட்டங்கள் நேற்று நடந்தது. அப்போது, வன்முறை வெடித்ததால் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணிர் புகைக்குண்டு வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர். இதில், பிஜ்னூரில் இருவரும், சம்பல், பிரோசாபாத், கான்பூரில் தலா ஒருவர் என 6 பேர் நேற்று உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, மீரட் மாவட்டத்தில் இருந்து 4 பேரும், வாரணாசியில் 8 வயது சிறுவன் ஒருவரும் பலியாகி உள்ளனர். இந்நிலையில், உத்திர பிரதேச மாநிலத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 3500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது.