tamilnadu

img

லக்னோ நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு: வழக்கறிஞர்கள் படுகாயம்

உத்தரபிரதேச மாநில தலைநகரில் உள்ள லக்னோ நீதிமன்றத்தில் இன்று பிற்பகலில் பயங்கரசத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 3 வழக்கறிஞர்கள்  காயம் அடைந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வெடிக்கும் நிலையில் இருந்த 3 குண்டுகளை கைப்பற்றி உள்ளனர். 
இந்த குண்டு வீச்சு சம்பவம்  வக்கீல்களுக்கு இடையிலான போட்டியின் விளைவாக இருக்கலாம் என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.