உத்தரபிரதேசத்தில் காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலன் மீது பெண் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் நகரில் ஜீவன்கார் பகுதியில் வசித்து வருபவர் பைசாத். இவர் கடந்த 6 மாதமாக காதலித்து வந்தார்.இந்நிலையில் கடந்த மாதம் முதல் பெண்ணை சந்திப்பதை தவிர்த்து வந்தார்.
இந்நிலையில் ஆசிட் வீச்rhசால் படுகாயம் அடைந்த பைசாத் பண்டிட் தீன்தயாள் இணை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய பைசாத்தின் தாயார் கூறியதாவது,
அந்த இளம்பெண் எனது மகனை தொலைபேசியில் அழைத்து உள்ளார்.
ஆனால், எனது மகன் தொலைபேசியை எடுக்க மறுத்திருக்கிறார். சம்பவத்தன்று காலையில் எனது மகனிடம் பேசியிருக்கிறார்.
எனது மகனுடன் அந்த இளம்பெண் தொடர்பில் இருக்க கூடும் என்று எனது இளைய மகன் என்னிடம் கூறினார். இதனிடையே, திருமணம் செய்து கொள்ளும்படி எனது மகனை இளம்பெண் கேட்டிருக்கிறார். அதற்கு அவன் ஒப்பு கொள்ளவில்லை. இதன் பின்பே அவன் மீது ஆசிட் வீச்சு சம்பவம் நடந்துள்ளது என கூறியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.