tamilnadu

img

உத்தரபிரதேசம்: கார் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி

உத்தர பிரசேத  மாநிலத்தில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம் நவாப்கஞ்ச் அருகே இன்று லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது. காரில் பயணம் செய்த 2 குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து  விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.