tamilnadu

img

உத்தரகண்ட் மாநிலத்தில் நிவாரண பொருள் கொண்டு செல்லப்பட்ட விமானம் விபத்து

உத்தரகண்டில் மழை வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருள் கொண்டு செல்லப்பட்ட விமானம் விபத்தில் சிக்கியது.

உத்தரகண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் விமானத்தின் மூலம் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்நிலையில், தொடர் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உத்தரகாசி மாவட்டத்திலிருந்து இன்று காலை மோல்டி பகுதிக்கு விமானத்தின் மூலம் நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. அப்போது அங்கு ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக விமானம் விழுந்து  விபத்தை  சந்தித்துள்ளது . விமானத்தில் இருந்த மூன்று பேரும் விபத்தில் இறந்துள்ளனர். 

;