மதுரை:
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு குறித்து தமிழக அரசு பத்து நாட்களில் உரியநடவடிக்கை எடுக்கும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நம்புவதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யக் கோரி வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு இவ்வாறு தெரிவித்துள்ளனர்.இந்த வழக்கின் மீது செவ்வாயன்று விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் கூறுகையில், இந்த விளையாட்டுகளால் மதுரையை சேர்ந்த வெங்கடேஷ் , நாக மீனா உள்ளிட்ட பலர்தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ள னர் என்பதை மேற்கோள் காட்டினர். மேலும், தெலுங்கானா மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டி, இந்தியஅளவில் ரம்மி விளையாட்டில் ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் பணம் புழங்குகிறது. இந்தப் பணம் எங்கு செல்கிறது, யார் கணக்கில் உள்ளது என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை நவம்பர் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.விராட் கோலி, தமன்னாவுக்கு நோட்டீஸ்தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்றுகோரி மதுரையைச் சேர்ந்த முகமது ரஸ்விஎன்பவர் தாக்கல் செய்த வழக்கை சென்னைஉயர்நீதிமன்ற மதுரைக்கிளைவிசாரித்தது. அப்போது நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் கூறுகையில், விளம்பரம் செய்யும் பிரபலமானவர்களில் பலர் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் அவரவர் பாக்கெட்டுகளை நிரப்புவதில் கவனம் செலுத்துகின்றனர். பொதுமக்களில் பலர் அவர்களை பின்பற்றுவார்கள் என அறிந்தும் இவ்வாறு செயல்படுவது ஏன்? என கேள்வி எழுப்பினர்.
கிரிக்கெட்டில் சூதாட்டம் இல்லையா? கிரிக்கெட் அணிகளில் மாநில பெயரை பயன்படுத்துவது ஏன்? எனக் கேள்வி எழுப்பினர். அதை பயன்படுத்தவில்லை எனில் யாரும் கிரிக்கெட்டைப் பார்க்கமாட்டார்கள். இது முற்றிலுமாக மக்கள் மனதில் ஒரு பிம்பத்தை உருவாக்கி, தவறாக வழிகாட்டி, மக்களை பார்க்க வைக்கின்றனர்; மக்களின் உணர்வுகளோடு விளையாடுகிறார்கள் எனக் கூறிய நீதிபதிகள், மத்திய, மாநில அரசுகள், கிரிக்கெட் வீரர்கள் விராட்கோலி, கங்குலி, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சுதீப், ரானா, நடிகை தமன்னா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.