புதுதில்லி:
சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 4-ஆம் தேதியும், இந்திய பொருளியல் தேர்வுகள் அக்டோபர் 16-ஆம் தேதியும் நடைபெறும் என யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. ஆனால், கொரோனா தொற்று அபாயம் இருக்கும் நேரத்தில் சுமார் 6 லட்சம் பேர் பங்கேற்கவுள்ள தேர்வை நடத்துவதுசரியாக இருக்காது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த மனுமீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் மற்றும் சஞ்சீவ் கண்ணா அமர்வில் திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, யுபிஎஸ்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தேர்வை ஒத்திவைக்கமுடியாது” என தெரிவித்திரு ந்தார். இந்நிலையில் இந்த வழக்கு புதனன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.