தகவல் அறியும் உரிமைச்சட்டம் தலைமை நீதிபதிக்கும் பொருந்தும்
தகவல் அறியும் உரிமைச்சட்டம் தலைமை நீதிபதிக்கும் பொருந்தும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகமும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வரும் என டில்லி உயர்நீதிமன்றம் 2010ம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 3 பொது நல வழக்குகள் தொடரப்பட்டன. இதனை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியது.
தகவல் அறியும் உரிமைச்சட்டம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் பொருந்தும். தில்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதே என்று 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தெரிவித்துள்ளது.
நீதித்துறையின் வெளிப்படைத்தன்மையை உணர்த்துவதற்காகவே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.