tamilnadu

img

கொரோனா தடுப்பு முகக்கவசம் அதிக விலைக்கு விற்கப்படுவதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை,மார்ச் 18-  கொரோனா தடுப்பு கிருமி நாசினிகள் மற்றும் முகக்கவ சங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதற்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முகக்கவசங்கள், கிருமி நாசினிகளை அத்தியாவசியப் பொருட்களாக அறிவித்த மத்திய அரசு, அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதையும் தடுக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தல் அனுப்பியுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. சென்னையில் முகக்கவ சங்கள், கிருமி நாசினிகள் கிடைக்காத நிலை உள்ளது. இதுபோன்ற பொருட்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பது ஏழு ஆண்டுகள் தண்டனை விதிக்கத்தக்க குற்றம்  என்று கூறி, சென்னையைச் சேர்ந்த ராஜேஷ் என்ற வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம்,இது தொடர்பாக தமிழக அரசு மார்ச் 20ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.