tamilnadu

img

சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணை ரத்து

சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் கடந்த நவம்பர் 30-ஆம் தேதி ஓய்வு பெற்றார். ஆனால் அவரை மேலும் ஒரு வருடத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் பணி நீட்டிப்பு வழங்கி, தமிழக அரசு சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை சிபிஐக்கு மாற்றிய அரசாணையை ரத்து செய்தது.  

இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் இரு தரப்பின் வாதங்களை விசாரித்த நீதிபதிகள் இன்று தீர்ப்பு அளித்தனர்.

சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து, சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் தொடரலாம் என உத்தரவிட்டனர். மேலும், விசாரணையின் போது பொன்.மாணிக்கவேல் கைது நடவடிக்கைகளில் ஈடுபட அதிகாரம் இல்லை என்றும் உத்தரவிட்டனர்.



;