tamilnadu

img

சுபஸ்ரீ வழக்கு : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, பள்ளிக்கரணை அருகே பேனர் சரிந்து விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம் பெண் இறந்தது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த செப் 13 அன்று நடந்த விசாரணையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியது, இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள்,  சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளனர். 

மேலும் பேனர் விவகாரம் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றம் மூலம்  தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆகவே தமிழக அரசு இது குறித்தான அறிக்கையை வருகின்ற செப் 25 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டனர்.
 

;