tamilnadu

img

சாத்தான் குளம்: 5 போலீசாரிடம் விசாரணை நடத்த சிபிஐ நடவடிக்கை

தூத்துக்குடி,ஜூலை 17- சாத்தான்குளம் காவல் நிலைய கொலை வழக்கில் மேலும் 5 போலீ சாரிடம் விசாரணை நடத்த சிபிஐ நடவடிக்கையில் இறங்கியுள்ளது. சாத்தான்குளம் காவல்துறையி னரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு வணிகர்களான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொல்லப்பட்டனர்.  இந்த வழக்கின் விசாரணையை சிபிஐயிடம் தமிழக அரசு ஒப்படைத் தது. இதன்படி, சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய் வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உள்பட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வா ளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகனேஷ் உள்ளிட்ட 5 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து சிபிஐ விசாரித்தது. இந்நிலையில் மேலும் 5 காவலர் களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது. இதற்காக திங்கள்கிழமையன்று மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.