சென்னை,அக்.25- ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யும் இணையதளங் களை முடக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது, ஆன்லைன் மூலம் பட்டாசு விற்க தடை விதிக்கக் கோரி, பட்டாசு வியாபாரி ஷேக் அப்துல்லா, உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆன் லைனில் பட்டாசுகள் விற்க தடை விதித்து உத்தரவிட்டது. இந்த தடை உத்தரவை அமல்படுத்த வில்லை எனக் கூறி, வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை துணைத்தலைவர் சஞ்சனா சர்மா, சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன், சென்னை மாநக ராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோ ருக்கு எதிராக ஷேக் அப்துல்லா நீதி மன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ஆன்லைன் பட் டாசு விற்பனைக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தர வின் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என முறையிட்டிருந்தார். தற்போது தீபாவளி பண்டிகையை ஒட்டி சட்டவிரோதமாக ஆன்லைனில் பட்டாசு விற்பனைகள் துவங்கிவிட்டதால், அத்தகைய இணையதளங்களை முடக்க சைபர் குற்றப் பிரிவு கூடுதல் டிஜிபி-க்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் கோரியுள்ளார். இதை விசாரித்த நீதிபதி ஆதி கேசவலு, ஏற்கெனவே உச்சநீதி மன்றம் பிறப்பித்துள்ள உத்தரவின்படி, ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்க ஆணையிட்டார். மேலும் ஆன்லைன் மூலம் பட்டாசுகள் விற்பது தண்டனைக்குரிய குற்றம் என விளம்பரப் படுத்தி நடவடிக்கை எடுக்கவும் நீதி பதி உத்தரவிட்டுள்ளார்.