தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி ஆலை நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் 100 நாட்கள் அமைதி வழியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 100 வது நாளான மே 22ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். மக்களின் கடும் எதிர்ப்பையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலையை திறக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலாளர் அர்ஜூணன், போராசிரியர் பாத்திமா, உள்ளிட்ட பலர் வழக்கு தொடுத்தனர்.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை. ஆலை இயங்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் அரசாணைக்கு எதிரான வேதாந்தா குழுமத்தின் மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுள்ளனது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை இடிக்க வேண்டும் என்று கோரி பேராசிரியர் பாத்திமா தொடர்ந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.