tamilnadu

img

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடையில்லை - உச்சநீதிமன்றம்


ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. 
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் தற்போது வரை திறக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து பெரும்பாலான தனியார்  பள்ளிகள்  ஆன்லைன்  வழியாக வகுப்புகளை நடத்தி வருகின்றன. 
ஆன்லைன் வகுப்புகளால் கண்கள் பாதிக்கப்படும் ஆபாச இணையதளங்களை  மாணவர்கள் காண  நேரிடுகிறது. இதனால் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
இதற்கிடையில் ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டு இருந்தது. 
இந்த நிலையில், ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. மேலும், ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டி நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்துள்ளது.