புதுதில்லி,பிப்.13- நிர்பயா வழக்கில் குற்றவாளி வினய் சர்மாவின் கோரிக்கை மனுவை வியாழனன்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தில்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா என்பவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்.இந்த வழக்கில் குற்றவாளிகளான முகேஷ்குமார் சிங், பவன்குமார் குப்தா, வினய்குமார் சர்மா, அக்ஷய்குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் தில்லி விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித் தது. இதனை தில்லி உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் உறுதி செய்தன. இந்நிலையில் குற்றவாளிகள் தரப்பில் கருணை மனு, மறுஆய்வு மனு மற்றும் சீராய்வு மனுக்கள் மாறி, மாறி தாக்கல் செய்யப்பட்டதால் தண்டனையை நிறைவேற்றுவது இரண்டு முறை தள்ளிப்போனது.
இந்நிலையில் வினய் சர்மா சார் பில், கருணை மனு நிராகரிப்பு பற்றிய பரிந்துரையை கவனமுடன் ஆய்வு செய்யும்படி உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் மீதான விசார ணை நீதிபதிகள் ஆர். பானுமதி, அசோக் பூஷண் மற்றும் ஏ.எஸ். போபண் ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழனன்று நடைபெற்றது. இதில், வினய் சார்பில் ஆஜரான வழக்க றிஞர் ஏ.பி. சிங், தில்லி ஆளுநர் மற்றும் உள்துறை அமைச்சர் இருவரும் கரு ணை மனுவை தள்ளுபடி செய்வ தற்கு பரிந்துரைப்பதற்கான கையெழு த்திடவில்லை என்றும் இந்த மனு நிரா கரிப்பில் அவசரம் காட்டப்பட்டது சட்ட விரோதம். அரசியல் சாசன மெய்ப்பொ ருள் மீறப்பட்டுள்ளது என்றும் கூறினார். எனினும், நீதிபதிகள் ஆவண சரிபார்ப்புக்கு பின்னர், தில்லி ஆளுநர் மற்றும் உள்துறை அமைச்சர் இரு வரும் கருணை மனுவை தள்ளுபடி செய்வதற்கு பரிந்துரை செய்து கையெ ழுத்திட்டுள்ளனர் என தெரிவித்தனர். தொடர்ந்து வினய்யின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.