தமிழகத்தில் பள்ளிகள் ஆன்லைனில் வகுப்புகள் நடத்த தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளளது.
தமிழகத்தில் ஆன்லைன் வகுப்பின் போது ஆபாச விளம்பரங்கள் வருகிறது என்று குற்றம் சாட்டி இரண்டு குழந்தைகளின் தாயான சரண்யா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு கல்வி சேனல் நடத்துகிறது என தமிழக அரசு வழக்கறிஞர் வாதிட்டார். இதையடுத்து மத்திய மாநில அரசுகள் பாதுகாப்பான ஆன்லைன் கல்வியை வழங்க எடுத்துள்ள நடவடிக்கை குறித்து வரும் 20ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் கொரோனா தொற்று காரணமாக அனைத்தும் ஆன்லைன் முறையில் உள்ளதால் பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடம் எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.