tamilnadu

img

உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக காங்கிரஸ் மனு

உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக காங்கிரஸ் மனு செய்துள்ளது. 
புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து தமிழக தேர்தல் ஆணையம் ஊரக பகுதிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டமான 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் வார்டு மறு வரையறை மற்றும் இட ஓதுக்கீட்டை முடித்த பிறகே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டு முறையீடு செய்யப்பட்டுள்ளது. திமுக தரப்பின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம் நாளை மறுநாள் விசாரணை செய்வதாக தெரிவித்துள்ளது.