tamilnadu

img

உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் வழக்கு

மும்பை, நவ.23- மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு ஆளுநர் அனுமதி அளித்த விவகாரத்தில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டாக உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. மகாராஷ்டிர மாநிலத்தில் முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ்,  துணை முத லமைச்சராக அஜித் பவார் ஆகிய இருவரையும் பதவி ஏற்க ஆளுநர்  பகத்சிங் கோஷ்யாரி அழைத்ததை எதிர்த்து காங்கிரஸ், சிவ சேனா, தேசியவாத காங். கூட்டாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன.  இந்த மனு ஞாயிறு அல்லது திங்கட்கிழமை விசா ரணைக்கு வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.