ஆன்லைன் வகுப்பால் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பா என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
மாணவர்கள் 2 மணிநேரத்திற்கு மேல் ஆன்லைன் வகுப்புகளில் அமர்ந்திருந்தால் அவர்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படும் இதனால் 40 நிமிடம் இடைவெளி விட்டு நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் விமல்மோகன் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மேலும் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்க கூடாது என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா உள்ளிட்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இதையடுத்து ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பா என்பது குறித்து அறிக்கை அளிக்க எழும்பூர் கண் மருத்துவமனை டீனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.