tamilnadu

img

அரசு பள்ளியில்  ‘வாட்டர் பெல்’ திட்டம்  அமல்

புளியம்பட்டி, டிச. 2- ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ‘வாட்டர் பெல்’ திட் டம் அமலுக்கு வந்தது. தமிழகத்தின், அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ, மாணவியர்கள் தண்ணீர் அருந்துவதற்கு, 10 நிமிடம் இடைவேளை விட வேண்டும் என்று பள்ளி தமிழக கல்வித்துறை அறிவித்திருந்ததது.  இதனை அடுத்து ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவ மாணவிகள் தண்ணீர் அருந்தும் வகையில் வாட் டர் பெல் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.  இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்து கூறியதாவது, இத்திட்டத்தின்படி, ஒரு நாளைக்கு மூன்று முறை வாட்டர் பெல் ஒலிக் கப்படும். காலை இடைவேளையில் 11 மணிக்கு  ஒரு முறையும், மதியம் 12.30 மணிக்கும், மாலை  3 மணி இடை வேளையிலும் பெல் ஒலிக்கப்பட்டு குழந்தைகள்  தண்ணீர் குடிக்க அனுமதிக்கப்படு கின்றனர். பாட்டிலில் தண்ணீர் கொண்டுவராத பள் ளிக்குழந்தைகளுக்கு தண்ணீர் ஏற்பாடு செய்து தண்ணீர் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

;