tamilnadu

சத்துணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்

ஈரோடு, ஏப். 4-

ஈரோட்டில் சத்துணவு சாப்பிட்ட பள்ளி குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம், சித்தோடு பகுதியில் உள்ளசாணார்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 41 குழந்தைகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில், வெள்ளியன்று மதியம் முட்டையுடன் கலவை உணவு வழங்கப்பட்டுள்ளது. இதை உட்கொண்ட மாணவ, மாணவிகளுக்கு திடீர் வாந்தி,மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள்அனைவரும் உடனடியாக சித்தோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 11 பேருக்கு தீவிர சிகிச்சை அளிப்பதற்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவ பரிசோதனையில் பழைய முட்டையாக இருந்ததாலும், சரியாக வேக வைக்காததாலும் இப்பிரச்சனை ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

;