ஈரோடு:
தியாகி கொடி காத்த குமரனின் பிறந்த நாள் விழா தமிழக அரசால், அரசு விழாவாக கொண்டாடப் பட்டு வருகிறது. அதன்படி, தியாகி கொடிகாத்த குமரனின் 117வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சொந்த ஊரான சென்னிமலை பேரூராட்சியில மாவட்ட ஆட்சித் தலைவர் சி.கதிரவன் தலைமை யில் விழா நடைபெற்றது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பண் ணண், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணண் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.சட்டமன்ற உறுப்பினர்கள் கே.வீ. ராமலிங்கம், கே.எஸ் தென்னரசு, சிவசுப்பிரமணியம்,தனியரசு ஆகியோரும் கொடிகாத்த குமரனின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.தொடர்ந்து, கொடிகாத்தகுமரன் அவர்களது வாரிசுதாரர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவப்படுத்தினர்.
மணிமண்டபம்
தியாகி கொடிகாத்த குமரனின் தம்பி மகன் அண்ணாதுரை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தனது பெரியப்பா வாழ்ந்த சென்னிமலையில் அவருக்கு மணிமண்டபம் கட்ட வேண் டும் எனவும் இந்தக் கோரிக் கையை கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.