வெள்ளகோவில், மே 12-ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் வெள்ளகோவில் அருகே திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடி எண் 248 இல் மாதிரிவாக்குகளை அழிக்காமல் வாக்குப் பதிவு நடைபெற்றதால் அங்கு மே 19 ஆம் தேதியன்று மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு வரப்பட்டு, தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் சாகுல் அமீது தலைமையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) தினேஷ், மாவட்ட ஆட்சியர் உதவியாளர் தேர்தல் பிரிவு அலுவலர் லதா ஆகியோர் மேற்பார்வையில் அனைத்துக் கட்சி முகவர்கள் முன்னிலையில், வாக்கு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும்பணி நடைபெற்றது.