tamilnadu

img

கரும்பு விவசாயிகளின் போராட்டம் வெற்றி பண பாக்கியை தருவதாக சர்க்கரை ஆலை நிர்வாகம் உறுதி

ஈரோடு, நவ.11- அரைத்த கரும்பிற்கு தர வேண் டிய பண பாக்கியை உடனடியாக தரக்கோரி ஆப்பக்கூடல் சக்தி சர்க் கரை ஆலை முன்பு கரும்பு விவசாயி கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பாக் கியை விரைந்து தருவதாக ஆலை நிர்வாகம் ஒப்புக்கொண்டது. ஈரோடு மாவட்டம், ஆப்பக்கடல் சக்தி சர்க்கரை ஆலையில் 2019-20 ல் அரைத்த கரும்புக்கு தர வேண்டிய பண பாக்கி ரூ.70 கோடியை ஆலை நிர்வாகம் தராமல் இழுத்தடித்து வந்தது. இதுகுறித்து கரும்பு விவ சாயிகள் பலமுறை மனு கொடுத் தும், பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித பலனுமில்லை.  இந்நிலையில், நிலுவையில் உள்ள பண பாக்கியை சக்தி சர்க் கரை ஆலை நிர்வாகம் உடனடியாக தர வேண்டும் என வலியுறுத்தி ஆப்பக்கூடல் சக்தி சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

இத்தகவலிறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர், ஆலை நிர்வாகத்தி னர் ஆகியோர் போராட்டத்தில் ஈடு பட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த் தையில் ஈடுபட்டனர். இப்பேச்சு வார்த்தையில் கோட்டாட்சியர்  ஜெயராமன், மாவட்ட ஆட்சிய ரின் நேர்முக உதவியாளர் முருகே சன், காவல்துறை துணை கண்கா ணிப்பாளர் கார்த்திகேயன், பவானி வட்டாட்சியர் பெரியசாமி, ஆலை நிர்வாகத்தின் சார்பில் திருவேங்க டம், விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.

இதில், பாக்கித் தொகையில் தவணை முறையாக ரூ. 62.25 கோடி தருவதாக ஆலை நிர்வாகம் ஒத்துக் கொண்டது. இதனையடுத்து, போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. முன்னதாக, இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள்  சங்க செயலாளர் வி.பி. கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனு சாமி, கரும்பு விவசாய சங்கத்தின் மாநில செயலாளர் டி.பி.கோபி நாத் ஆகியோர் சிறப்புரையாற்றி னர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், காங்கி ரஸ் கட்சியின் சரவணன், கொமதே கட்சியின் சிவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரி வித்தனர்.