ஈரோடு, ஜூலை 12- சாலையை சீரமைக்காத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஈரோட்டில் பொதுமக்கள் மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 53 ஆவது வார்டு வெண்டிபாளையம் பகுதியில் மாநகராட்சி சார்பில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக் கடை திட்டத்துக்காக சாலைகள் தோண்டப்பட்டது. இதற் கான பணிகள் முடிவடைந்த நிலையில் தோண்டப்பட்ட சாலைகள் செப்பனிடப்படாமல் உள்ளதால் குண்டும், குழி யுமாக காணப்படுகிறது.
இதனால், வாகன ஓட்டிகள் பெரி தும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை சீரமைக்கக் கோரி மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் வெள்ளியன்று பழைய ரயில்வே கேட் சாலையில் அமர்ந்து மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தகவலறித்து அங்கு வந்த மாநகராட்சி அதி காரிகள் மற்றும் காவல் துறையினர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், தடை யின்றி குடிநீர் விநியோகிக்க உடனடியாக நடவ டிக்கை எடுக்கப்படும் என்றும், பழுதடைந்த சாலை செப்பனி டப்படும் என்றும் உறுதியளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.