tamilnadu

தனியார் பேருந்து மோதி தொழிலாளி பலி

ஈரோடு, ஜன, 11- நம்பியூர் அருகே தனியார் பேருந்து மோதி தொழி லாளி ஒருவர் பலியானார்.  ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே உள்ள புது சூரியபாளையம் என்ற இடத்தில் தனியார் பேருந்து ஒன்று அந்தியூரில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இப்பேருந்தானது புது சூரிய பாளையம் பகுதியில் சென்றபோது இப்பேருந் தின் ஓட்டுநர் கண்ணன் (25), முன்னால் சென்ற அரசு பேருந்தை முந்தி சென்றுள்ளார். அப்போது எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த கன நாதன் (55) என்பவர் மீது பேருந்து மோதியது. இதில் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோபி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே கனநாதன் உயிரிழந்தார்.  இவ்விபத்தில் பலியான கனநாதனின் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம், பரமகுடியாகும். புது சூரியபாளையத்தில் உள்ள சிமெண்டு செங்கல் தயா ரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவர் மீது மோதிய தனியார் பேருந்தின் ஓட்டுநர் கண்ணனை அப்பகுதி மக்கள் பிடித்து சரமாரியாக தாக்கி, நம்பி யூர் காவல்துறையினரிம் ஒப்படைத்தனர்.

;