tamilnadu

img

அரசு அலுவலகங்கள், பள்ளிகள் அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு - சிபிஎம் மனு

ஈரோடு, ஜூலை 2- அந்தியூர் பேரூராட்சி பகுதியில் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் அமைந்துள்ள இடத்தில் மது பானக்கடை திறக்க எதிர்ப்பு தெரி வித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆட்சே பணை மனு அளித்தனர்.   ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூ ராட்சிக்குட்பட்ட சீத்தாலட்சுமி தியேட் டர் அருகில் புதிதாக அரசு மது பானக்கடை அமைப்பதற்கான பணி கள் நடைபெற்று வருகிறது. இங்கு குழந்தைகள் பயிலும் ஆரம்பப் பள் ளியும், அரசு பெண்கள் மற்றும் ஆண் கள் மேல்நிலைப்பள்ளியும் இயங்கி வருகிறது. இங்கு குழந்தைகள் உட்பட சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற் பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள். மேலும், இம்மதுபா னக்கடையானது அந்தியூர்- பர் கூர் பிரதான சாலையாகும். இப்பகு தியில் ஆயிரக்கணக்கான நோயாளி கள் தினமும் அந்தியூர் அரசு மருத்து வமனைக்கு வந்து செல்கின்றனர்.

மேலும் அப்பகுதியைச் சுற்றி அந்தியூர் பேரூராட்சி அலுவலகம், வனச்சரக அலுவலகம், உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகம், வட்டாரவள மைய அலுவலகம், தனியார் மருத்துவ மனைகள் ஆகியவை அமைந்துள்ளன.  இப்படியான நகரின் முக்கிய பகு தியில் அரசு மதுபானக்கடை திறக்கப்ப டுமானால் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பின ரும் பெரும் இன்னலுக்கு உள்ளா வார்கள். எனவே, இப்பகுதியில் அரசு மதுபானக்கடையை திறக்க முயற்சிப் பதை தமிழக அரசும், ஈரோடு மாவட்ட நிர்வாகமும் கைவிட வேண்டுமென வலியுறுத்தி  மார்க்சிஸ்ட் கட்சியின் அந்தியூர் தாலுக்கா செயலாளர் ஆர். முருகேசன், மாவட்டக்குழு உறுப்பி னர் எஸ்.வி.மாரிமுத்து, ஜி.பழனிச் சாமி உள்ளிட்டோர் தலைமையில் அந் தியூர் வருவாய் வட்டாட்சியர் மற்றும் காவல் ஆய்வாளரிடம் மனு அளிக்கப் பட்டது.