tamilnadu

மானிய விலையில் வேளாண் கருவிகள் பெற விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்பு

 ஈரோடு, செப்.19- மானிய விலையில் வேளாண் கருவிகளைப் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளர். இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிர வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது, தமிழகத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் நடப்பு நிதி ஆண்டில் ஈரோடு மாவட் டத்தில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலை யில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வழங்குதல், மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள், கருவி கள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைத்தல் முதலான பணிகள் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி விவசாயிகளுக்கு டிராக்டர், பவர் டில்லர், சுழற்கலப்பை, கொத்துக்கலப்பை, கரும்பு கட்டை சீவும் கருவி, கரும்பு சோகை துகளாக்கும் கருவி, தென்னை ஓலை துகளாக்கும் கருவி முதலான வற்றுக்கு அவற்றின் மொத்த விலையில் 50 சத விகிதம் அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத் தொகை இவற்றில் எது குறைவோ, அந்தத் தொகை மானியமாக சிறு, குறு, தாழ்த்தப்பட்ட பழங்குடியின, பெண் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதர விவசாயிகளுக்கு அவற்றின் மொத்த விலையில் 40 சதவிகிதம் அல்லது அரசால் நிர்ண யம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத் தொகை, இவற்றில் எது குறைவோ அந்த தொகை மானியமா கவும் வழங்கப்பட உள்ளது. விவசாயிகளுக்கு அதிக விலை உள்ள வேளாண் இந்திரங்கள் குறைந்த வாடகைக்கு கிடைக்கும் வகையில், முன்னோடி விவ சாயிகள், விவசாய சுய உதவிக் குழுக்கள், தொழில் முனைவோருக்கு ரூ.25 லட்சம் மதிப்புடைய வாடகை மையங்கள் அமைக்க 40 சதவிகிதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் மானியமாக வழங்கப்படும். மொத்த மானியத் தொகையில் பொதுப் பிரிவின ருக்கு ரூ.5 லட்சமும், ஆதிதிராவிட பிரிவினருக்கு ரூ.3 லட்சமும் பிடித்தம் செய்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மானிய இருப்பு நிதிக் கணக்கில் ஒப்பந்த காலமான 4 ஆண்டுகள் இருப்பில் வைக்கப்படும். மீதித் தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடி யாகச் செலுத்தப்படும். 4 ஆண்டுகளுக்குப் பின் பயனாளிக்கு வழங்கப் பட்ட வேளாண் இந்திரங்கள், கருவிகளை சம்பந் தப்பட்ட அலுவலர்கள் சரிபார்த்த பிறகு மானிய இருப்புத் தொகை திரும்ப வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு வேளாண் பொறியியல் துறை, ஈரோடு உபகோட்ட அலுவலக உதவி செயற் பொறியாளரை தொடர்பு கொள்ளலாம் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.