ஈரோடு, அக்.4- ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு வியாழனன்று அதிக அளவில் மாடுகள் வந்த பேதிலும், மழை பெய்வதால், விவசாயிகள், வியா பாரிகள் குறைந்த எண்ணிக்கையில் வந்திருந்தனர். ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு வியாழனன்று ரூ. 2 ஆயிரம் முதல், ரூ.18 ஆயிரம் வரை 100 கன்றுகள், ரூ.18 ஆயிரம் முதல் 36 ஆயி ரம் வரை 150 எருமை, ரூ.16 ஆயிரம் முதல் ரூ. 32 ஆயிரம் வரை 300 பசு மாடுகள் விற்பனைக்கு வந்தன. இதில் ஈரோடு, கரூர், நாமக்கல், திண்டுக் கல், சேலம், திருச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து, மாடுகள் விற்பனைக்கு வந்தன. அதிக அளவில் மழை பெய்வதால், வியாபாரிகள், விவசாயிகள் குறைந்த எண்ணிக்கையில் வந்திருந்தனர். இதுகுறித்து, மாட்டு சந்தை மேலாளர் ஆர்.முருகன் கூறுகையில், கேரளா, ஆந்திரா, தெலுங் கானா, கர்நாடகா பேன்ற மாநில வியாபாரிகள் அதிகமாக வந்தனர். ஆந்திரா, கர்நாடகாவில், அரசின் மானிய விலையில் கறவை மாடு கெள்முதல் திட்டத்தில், மாடுகளை வாங்கி சென்றனர். அங்கிருந்து விவசாயிகள், வியாபாரிகள், கால்நடை மருத்துவர்கள் வந்து, நேரடியாக மாடுகளை வாங்கினர். அதிகமாக, எருமை மற்றும் கன்றுகளை தேர்வு செய்தனர். இதேபோல் மஹராஷ்டிரா, கோவா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் மானிய விலையில் மாடுவாங்கும் திட்டம் இருந்தும், மழையால், மாடுகளை கெண்டு செல்வது, பராமரிப்பது சிரமம் என்பதால், வியாபாரிகள், விவசாயிகள் வரவில்லை. இருப்பினும், 80 சதவிகித மாடுகள் விற்பனையானது. ரூ.2.5 கோடி விற்பனை நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.