கோபி, ஜூன் 7- கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் இப்கோ கூட்டுறவு நிறுவனத்தின் கால் நடை தீவன விற்பனையை தமிழக அமைச் சர்கள் கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் கே.சி. கருப்பணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கால்நடை வளர்ப்போர் மற்றும் நுகர் வோர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இப்கோ கிசான் கால்நடை தீவ னங்களை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் இப்கோ கிசான் தீவனத்தின் முதல் விற் பனை தொடங்கும் நிகழ்வு ஞாயிறன்று நடைபெற்றது. அந்தியூர் சட்டமன்ற உறுப் பினர் ராஜாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த விற்பனை தொடங்க நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகி யோர் கலந்து கொண்டகுறைந்த விலை கால் நடைத் தீவன விற்பனையை தொடங்கி வைத்தனர். பொலவக்காளிகாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தொடங்கப்பட்ட இந்த குறைந்த விலை கால்நடை தீவன விற்பனை மையம் மூலம் பவானி, அம்மாபேட்டை, அந்தியூர் டி.என். பாளையம் மற்றும் கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் உள்ள 63 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்க ளின் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என் றும், குறைந்த விலையில் பால் உற்பத்தியை அதிகரிக்க ஏதுவாக அமையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.